• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜனாதிபதி செயலாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு நாமல் எம்.பி சவால் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜனாதிபதி செயலாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு நாமல் எம்.பி சவால் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
ஜனாதிபதி செயலாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு நாமல் எம்.பி சவால்

வரிச்சுமை மற்றும் அதிகரித்து வரும் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், குறிப்பாக இளம் தொழில்முனைவோரால் நடத்தப்படும் வணிகங்களை இயக்குவது கடினமாகி வருவதாகக் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இதன்மூலம் அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தனது அர்ப்பணிப்பை நிரூபிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை தொடர்பாக, இந்த குற்றச்சாட்டுகளை SLPP நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தார்.

குளியாப்பிட்டியவில் நேற்று சனிக்கிழமை (22) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, ஊழலை ஒழிப்பது குறித்து ஜனாதிபதி தொடர்ச்சியாகப் பேசி வருவதாகக் குறிப்பிட்டு, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் அந்த அர்ப்பணிப்பை நிரூபிக்குமாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஜனாதிபதி திருடர்களைப் பிடிப்பது குறித்தும், நேர்மையை உறுதிப்படுத்துவது குறித்தும் பேசுகிறார். அந்த அர்ப்பணிப்பைக் காட்டுவதற்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும். ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தவறிவிட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ விமர்சித்தார்.

விவசாயிகள் குறைந்த நெல் விலை காரணமாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அதேநேரம் நுகர்வோர் அதிக அரிசி விலை காரணமாக பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், வரிச்சுமை மற்றும் அதிகரித்து வரும் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், குறிப்பாக இளம் தொழில்முனைவோரால் நடத்தப்படும் வணிகங்களை இயக்குவது கடினமாகி வருவதாகக் கூறினார்.

அரசு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் இணையவழி (சைபர்) சம்பவங்களை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்தும் விமர்சித்த நாமல் ராஜபக்ஷ, அதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

“அரசாங்கம் மோதல்களைத் தவிர்த்துவிட்டு, மக்களுக்காக வேலை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்களே தவிர, மேலும் அரசியல் மோதல்களை அல்ல” என்றும் அவர் கூறினார்.

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், துறைமுக நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்கு எதிர்க்கட்சிக்கு எந்தவோர் அதிகாரமும் இல்லை என்று வாதிட்டார். 

அத்துடன், தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தி, அதன் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

விமான நிலையங்களில் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது புதிய ரூல்.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

புகைமூட்டத்திற்கு மத்தியில் ஆஸ்துமா, சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரிப்பு

Next Post
புகைமூட்டத்திற்கு மத்தியில் ஆஸ்துமா, சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரிப்பு

புகைமூட்டத்திற்கு மத்தியில் ஆஸ்துமா, சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin