கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் இரண்டாம் கும்பல் பெரஹரா இன்று வெகு விமரிசையாக வீதியுலா வந்தது.
இன்றைய பெரஹராவில் புனித தந்ததாது பேழையைச் சுமந்து செல்லும் அரிய வாய்ப்பு, ஸ்ரீ தலதா மாளிகையின் யானைகள் அணியைச் சேர்ந்த ஜனராஜா யானைக்கு கிடைத்தது.
குறிப்பாக, ஜனராஜா யானை புனித தந்ததாது பேழையைச் சுமக்கும் பணியில் ஈடுபடுவது 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெறுவது சிறப்பம்சமாகும்.
ஜனராஜா யானையின் இடது புறத்தில் துணை யானையாக மியன் ராஜாவும், வலது புறத்தில் துணை யானையாக சிங்கராஜாவும் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர்.
இன்றைய இரண்டாம் கும்பல் பெரஹரா பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.



