வடமத்திய, வடமேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சில கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பகுதிகளுக்குள் படகுகள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. R

