Last Updated:
காசாவில் இன்னும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த 112 உறவுக்காரர்களின் உடல் எச்சங்கள், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு உருக்கமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டன.
2023ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அபு ஷரியா மற்றும் ஹசைனா ஆகிய உறவுக்கார குடும்பங்கள் வசித்த பகுதி மீது தாக்குதல் நடந்தது. கனரக இயந்திரங்கள் இல்லாததால், இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்க பல ஆண்டுகள் ஆனதாக குடும்பத்தினரும் மீட்புக் குழுவினரும் தெரிவித்தனர்.
இறுதியாக மீட்கப்பட்ட உடல் எச்சங்கள் பாலஸ்தீனக் கொடியில் போர்த்தப்பட்டு, நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இறுதி ஊர்வலத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டன. உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். காசாவில் இன்னும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா: 3 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட 112 சடலங்கள்… உருக்கமான முறையில் உறவினர்கள் நல்லடக்கம்!


