சென்னையில், தமிழ்நாடு அரசின் தொழில்வழிகாட்டி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘சப்’ (Chubb) மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ‘நார்டெக்ஸ்’ (Nordex) ஆகிய நிறுவனங்கள் சென்னையில் திறன் மையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
‘சப்’ நிறுவன திறன் மையத்தில் 220 பேருக்கும், ‘நார்டெக்ஸ்’ நிறுவன ஆராய்ச்சி மையத்தில் 1,000 பேருக்கும் அதிக ஊதியம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல, ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான, மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், இந்தியவில் தனது முதல் வளாகத்தை சென்னையில் நிறுவுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
சென்னை வேளச்சேரியில் 125 கோடி ரூபாய் முதலீட்டில் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல்கலை. வளாகம் அமைய உள்ளதாகவும், இதன் மூலம் 200-க்கும் மேற்படோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அரசு கூறியுள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் தென்கொரியாவின் மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம், வாகன உதிரிபாக உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தென் கொரியாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சென்று பேச்சு நடத்தியதன் பலனாக கிடைத்த இந்த ஆலையால், 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு அரசு முழு ஒத்துழைப்பை அரசு வழங்கும் என முதலீட்டாளர்களிடம் முதலமைச்சர் விஜய் உறுதி அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

