அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவர் பெருந்தொகை மதிப்புள்ள போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான குறித்த பெண்ணை ரூ. 10 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 237 கிராம் கொக்கைனை வைத்திருந்த குற்றச்சாட்டில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தோஹா வழியாக இலங்கை
அவர் அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்குப் பயணம் செய்து, பின்னர் கத்தாரின் தோஹா வழியாக இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விமானத்திலிருந்து இறங்கிய பிறகு, அவர் சக்கர நாற்காலியில் முனையத்தில் நடமாடியது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனைதொடர்ந்து, சந்தேக நபர் தானாக முன்வந்து கொக்கைன் அடங்கிய 14 உருண்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மேலும் பல உருண்டைகளை விழுங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

