Last Updated:
உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை வரும் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ரத யாத்திரை வரும் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை மேலும் சிறப்பாக்கும் விதமாகவும், ரத யாத்திரையை ஒழுங்கமைக்கப்பட்டதாக மாற்றும் வகையிலும், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
அதாவது ‘Tech for Seva’ என்ற முன்னெடுப்பின் மூலம், ‘பூரி அன்ன சேவா 2026 ஜிஐஎஸ் தளம்’ (Puri Anna Seva 2026 GIS Platform) என்ற இணைய அடிப்படையிலான டிஜிட்டல் அமைப்பை ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ரத யாத்திரை தொடர்பான உள்கட்டமைப்புகளைத் திட்டமிடவும், கண்காணிக்கவும், சரிபார்க்கவும் மற்றும் ஆவணப்படுத்தவும் உதவும். இந்த ஜிஐஎஸ் (புவியியல் தகவல் அமைப்பு) தளம், அன்னதான மையங்கள், காவல் சாவடிகள், சுவர் அலங்காரங்கள், வெளிப்புற விளம்பரப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள், வாக்குச்சாவடிகள், கோயில்கள் மற்றும் பிற முக்கிய இடங்களின் இருப்பிடங்கள் குறித்த தகவல்களை வழங்கும்.
இதன் மூலம் பக்தர்கள், பல்வேறு சேவைகளையும், அது தொடர்பான தகவல்களையும் பெற முடியும். குறிப்பிட்ட சேவைகளைக் கண்டறிவது, அவற்றை அடைவதற்கான வழிகளைப் பெறுவது பக்தர்களுக்கு எளிதாக அமையும்.
Puri Seva 2026: பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை சிறப்பிக்கும் ரிலையன்ஸ்.. ‘பூரி அன்ன சேவா 2026’ டிஜிட்டல் தளம் தொடக்கம்!


