Last Updated:
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி போட்டி சவுத்டமில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும் நிலையில், ஆறுதல் வெற்றியாவது பெறுவதற்கு இந்தியாவும் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தனது முதல் 3 ஆட்டங்களிலும் ஏமாற்றம் அளித்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்த ஆட்டத்திலாவது அதிரடியை காட்டுவாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
Jul 11, 2026 10:48 AM IST


