Last Updated:
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புகளை, சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து அமெரிக்கா தோண்டி அழிக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
போர் நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேலும் சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாகவும், ஈரான் தரப்பில் இருந்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதியில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதலைத் தொடங்கிய நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பாகிஸ்தானில் இரண்டு கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து, கத்தாரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்கள் நீட்டிக்க முடிவு எட்டப்பட்டதாகவும், அது தொடர்பான வரைவு ஒப்பந்தம் தயார் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஒரு போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க மாட்டோம் என்ற நிபந்தனையை ஈரான் ஏற்க வேண்டும் என்று டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், எவ்வித சுங்கக்கட்டணமும் வசூலிக்காமல், கப்பல்கள் சுதந்திரமாக செல்ல வேண்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புகளை, சர்வதேச அணுசக்தி முகமையுடன் இணைந்து அமெரிக்கா தோண்டி அழிக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஈரான், டிரம்ப் முன்வைத்துள்ள நிபந்தனைகள், போர் ஒப்பந்த நீட்டிப்பு வரைவில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, ஈரான் தரப்பில் இருந்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் டிரம்ப் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எட்டப்படாததால், போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு.. மீண்டும் நிபந்தனைகளை விதித்த ட்ரம்ப்.. முடிவு எடுக்காத ஈரான்..!

