சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பக்கம் நிற்பது முக்கியம் என இன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் எலைன் பியர்சன் தெரிவித்துள்ளார்
சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களை மீறி இன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர் தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிவழங்கப்படவேண்டிய சர்வதேச முயற்சிகளுக்கும் முள்ளிவாய்க்காலில் வைத்தே அழைப்பு விடுத்துள்ளார்
17 ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லை
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மிக முக்கியமான இடமான முள்ளிவாய்காலில் மனித உரிமை கண்காணிப்பகம் இன்று பிரசன்னப்பட்டமை மிகவும் முக்கியமானதெனவும் அவர் குறிப்பிட்டார்

17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லையெனவும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் குறித்த பல பதில்களை பல தமிழ்க் குடும்பங்கள் தொடர்ந்து தேடி வருவதாக பியர்சன் குறிப்பிட்டார்.
சர்வதேச முயற்சிகளின் தோல்வி
அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலுக்காக அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளின் தோல்வியையும் பியர்சன் விமர்சித்தார்.
“ஜெனிவாவில் மனிதஉரிமைபேரவையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் தீர்மானங்கள் மட்டும் போதாது,” என்று அவர் விசனம் வெளியிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

