யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த
குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட
கால பகுதிக்கு பின்னர் புத்தளம் வாசியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் 160 பரப்பு காணியை மோசடியான உறுதியை முடித்து காணி
மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.
யாழ் நகரப்பகுதியில் நடமாடிய நிலையில் கைது
குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர்
அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்வதற்கு கடந்த ஒரு வருட காலமாக
காவல்துறையினர் முயற்சிகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை(20) கஸ்தூரியார் வீதி
பகுதியில் நடமாடுவதாக காவல்துறை புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் ,சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

