திரெங்கானுவின் செட்டியுவில் உள்ள லதா உலு கசார் என்ற இடத்தில், தனது நண்பரைக் காப்பாற்ற முயன்றபோது, மலேசியா தெரெங்கானு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஜோகூர், பத்து பஹாட்டைச் சேர்ந்த 22 வயதான சுரயா ஹசன், தனது பல்கலைக்கழக நண்பர்கள் ஏழு பேருடன் அந்த சுற்றுலாத் தலத்தில் இருந்ததாக செட்டியு காவல் நிலையத் தலைவர் ஜைன் டிரிஸ் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
சுரயாவின் தோழியான 25 வயதான நூர் நஜ்வா ஃபரினா, அடிலா என்று மட்டும் அடையாளம் காணப்பட்ட மற்றொரு தோழி நீரில் தத்தளிப்பதைக் கவனித்ததாக அவர் கூறினார். அவர்கள் இருவரும் அடிலாவைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சுரயா நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கினார். நஜ்வாவும் நீரில் மூழ்கும் நிலைக்குச் சென்றார். ஆனால் மீட்கப்பட்டார் என்று அவர் கூறினார்.




