Last Updated:
கடந்த போட்டியின் வெற்றி தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும், அதே உத்வேகத்துடன் இன்றைக்கு களம் இறங்குவதாகவும் சிஎஸ்கே கேப்டன் கூறினார்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தற்போது மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதை அடுத்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்க உள்ளனர். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ள சூழலில் இந்த போட்டியில் அதே உத்வேகத்துடன் வீரர்கள் விளையாட உள்ளார்கள்.
மேலும் கொல்கத்தாவுடன் ஒப்பிடும்போது சென்னை அணி பேட்டிங் மற்றும் பவுலிங் வலிமையாக இருப்பதால் இன்றைய ஆட்டம் சென்னை அணியின் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு இன்றைய போட்டியில் தோனி விளையாடவில்லை. டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில் அதே அணியுடன் இன்றைய போட்டியிலும் சென்னை அணி விளையாடுகிறது.
டாஸ் வென்றபோது கருத்து தெரிவித்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த போட்டியில் 212 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற்றதை குறிப்பிட்டார். கடந்த போட்டியின் வெற்றி தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும், அதே உத்வேகத்துடன் இன்றைக்கு களம் இறங்குவதாகவும் அவர் கூறினார்.
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ், குர்ஜப்னீத் சிங், கலீல் அகமது.
இம்பேக்ட் சப் வீரர்கள்- மேத்யூ ஷார்ட், அகேல் ஹொசைன், கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், மாட் ஹென்றி.


