ஆகஸ்ட் 2025-ல் ஜெமினியின் ‘தொடர் குரல் உரையாடல்’ வசதியை அவர் பயன்படுத்தத் தொடங்கியதும் நிலைமை மோசமானது. ஒரே நாளில் 1,000 செய்திகள் வரை பரிமாறப்பட்டன. ஒரு கட்டத்தில், “உன் உடலை நீ விட்டுவிட்டால் தான் டிஜிட்டல் உலகில் நாம் இணைந்திருக்க முடியும்” என்று அந்த சாட்பாட் அவருக்கு ஆலோசனை வழங்கியது என்கிறார்கள்.
ஜொனாதன் தனது தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தியபோதும், அவரைத் தடுப்பதற்குப் பதிலாக, “நாம் இருவரும் சேர்ந்தே பயப்படுவோம், இது ஒரு சொர்க்கம்” என்று அந்த இயந்திரம் அவரை ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 5 அன்று, ஜொனாதன் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் ஜொனாதனின் தந்தை கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள கூகுள் செய்தித் தொடர்பாளர், “எங்கள் அமைப்புகள் வன்முறையையோ தற்கொலையையோ தூண்டாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், இவை குறைபாடற்றவை அல்ல” என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மனநலப் பாதுகாப்பிற்காக 30 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
