Last Updated:
இந்த நன்னாளின் மகிழ்ச்சி ஆண்டுதோறும் நிலைத்திருக்கவும், வெற்றியும் ஆரோக்கியமும் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி
தமிழ் புத்தாண்டு மற்றும் பைசாகி பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை அவரது அரசு இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சித்திரை முதல் நாளான இன்று உலகம் தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
தற்போது விசுவாவசு ஆண்டு நிறைவு பெற்று பராபவ ஆண்டு பிறந்திருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் நரேந்தி மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், இந்த நன்னாளின் மகிழ்ச்சி ஆண்டுதோறும் நிலைத்திருக்கவும், வெற்றியும் ஆரோக்கியமும் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் புத்தாண்டையொட்டி, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் அரசு இல்லமான உபராஷ்டிரபதி பவனுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார், குடியரசு துணைத் தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் புத்தாண்டு எவ்வாறு நமது முன்னோர்களின் ஞானத்தைப் பறைசாற்றுகிறது என்பது குறித்துப் பிரதமருடன் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Called on Vice President Thiru CP Radhakrishnan Ji and conveyed greetings on the special occasion of Puthandu. Praying for a wonderful year ahead, filled with good health and happiness.@VPIndia @CPR_VP pic.twitter.com/TknG4GqbFn
— Narendra Modi (@narendramodi) April 14, 2026
“தமிழ்ப் புத்தாண்டு என்பது சம்பிரதாயக் கொண்டாட்டம் அல்ல. நம் முன்னோர்களின் அறிவாற்றலைக் கொண்டாடும் அற்புத நிகழ்வு. பாரம்பரியம், குடும்பம், ஆன்மிகம், வாழ்வியல் ஒழுங்கு என அனைத்தையும் இணைக்கும் பண்டிகை. புதிய நம்பிக்கையோடு பழைய அனுபவங்களைக் கொண்டு முன்னேறுவதற்கான தொடக்கம். தமிழர்…
— Vice-President of India (@VPIndia) April 14, 2026
மேலும், இந்தப் பண்டிகை பாரம்பரியம், குடும்ப உறவுகள், ஆன்மீகம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்வதை அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத் துணை தலைவருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய மோடி.. பூஜை அறையில் ஆரத்தி எடுத்து வழிபாடு..


