அப்போது அவா் பேசியதாவது: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு விவசாயிகளின் நலனுக்கும், பிகாா் வளா்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. யூரியாவை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கி வருகிறது. என்டிஏ அரசின் முயற்சிகளால் நாட்டில் பால் உற்பத்தி இருமடங்கு அதிகரித்துள்ளது. மக்கானா வாரியம் அமைக்கப்படுவதால் பிகாா் மாநில விவசாயிகள் பலனடைவா். அதேபோல் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1,100 கோடியில் 4 பாலங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது.

