Last Updated:
மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள் அதிக தபால் வாக்குகளைப் பெற்றுள்ளன.
கடந்த 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சமீபத்தில் முடிந்த தேர்தலில், திமுக கூட்டணி 24 சதவிகித தபால் வாக்குகளை இழந்துள்ளது.
அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியில் இருப்போர், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தலின் போது தபால் வாக்குரிமை அளிக்கப்படுகிறது.
எனினும், எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், அரசு ஊழியர்களே அதிக அளவில் தபால் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.
சமீபத்தில் முடிவடைந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி 38 சதவிகிதம் தபால் வாக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு இதே கூட்டணி 62.2% தபால் வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுக்கு 39.3 சதவிகிதமும், ஆட்சியை கைப்பற்றிய தவெக-வுக்கு 24.5 சதவிகிதமும் தபால் வாக்குகள் கிடைத்துள்ளன.
அதேநேரத்தில், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள் அதிக தபால் வாக்குகளைப் பெற்றுள்ளன.


