Last Updated:
ஜப்பான் தனது தொழில்நுட்ப வலிமையையும், பண்பாட்டையும் எளிமையாகவும் வண்ணமயமாகவும் வெளிப்படுத்தியது
ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழாவில் இந்தியா சார்பில் மனு பாக்கர், பவன் ஷெராவத் ஆகியோர் தேசிய கொடியேந்தி அணியை வழிநடத்தினர்.
ஜப்பான் நாட்டின் நகோயாவில்(Nagoya) 20 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான தொடக்க விழா நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை ஜப்பான் பேரரசர் நருஹிடோ முறைப்படி தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள் இடம்பெற்றன. ஜப்பான் தனது தொழில்நுட்ப வலிமையையும், பண்பாட்டையும் எளிமையாகவும் வண்ணமயமாகவும் வெளிப்படுத்தியது.
இதில், 45 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து வந்தனர். இந்திய அணிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.


