Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: சுமார் 2 வாரங்கள் லண்டனில் ஸ்டாலின் என்ன செய்கிறார்? யாரையெல்லாம் அவர் சந்திக்கிறார்? யாரெல்லாம் அவரை சந்திக்கிறார்கள்? என்கிற தகவல்களை அறிந்துகொள்ள தமிழ்நாடு மாநில உளவுத்துறை மெனக்கெட்டு வருகிறது. விஜய் உத்தரவின் பெயரின் ஸ்டாலினை பற்றி உளவுத்துறை நோட்டமிட்டு வருகிறதாம். ஆனால் இதில் உளவுத்துறைக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்பநிதி
இதையடுத்து பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்பநிதி பட்டம் பெறுகிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பட்டம் வாங்கும் இன்பநிதியை வாழ்த்துவதற்கும், சற்று ஓய்வெடுத்து விட்டு வருவதற்கும் கடந்த 4-ந்தேதி தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார் ஸ்டாலின். ஜூலை 18-ந்தேதி சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்.

2 வாரங்கள் லண்டனில் ஸ்டாலின் என்ன செய்கிறார்?
சுமார் 2 வாரங்கள் லண்டனில் ஸ்டாலின் என்ன செய்கிறார்? யாரையெல்லாம் அவர் சந்திக்கிறார்? யாரெல்லாம் அவரை சந்திக்கிறார்கள்? என்கிற தகவல்களை அறிந்துகொள்ள மாநில உளவுத்துறை மெனக்கெட்டு வருகிறது. லண்டனில் அவர்களுக்கு சோர்ஸ் இல்லை என்பதால் தகவல்களை சேகரிப்பதில் சுணக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால், மத்திய உளவுத் துறையின் உதவியை நாடியிருக்கிறது மாநில உளவுத்துறை என்கிறார்கள்.
லண்டனில் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்
ஏற்கனவே ஸ்டாலினின் பயணத்தை ஃபாலோ பண்ணும் மத்திய உளவுத் துறையினர், தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை ஷேர் செய்து கொள்வதில் இறுக்கமாக இருக்கிறார்களாம். இதனால் லண்டனில் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிற தகவல் மாநில உளவுத்துறைக்கு கிடைப் பதில் சிரமம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தினமும் தெரிந்து கொள்கிறார் ஸ்டாலின். கரூருக்கு முதல்வர் விஜய் செல்வது உறுதி செய்யப்பட்டதுமே, கரூரில் அந்த தம்பி (விஜய்) திமுகவை அட்டாக் பண்ணித் தான் பேசுவார்.
கரூர் பேச்சுக்கு உடனடி பதில் தர வேண்டும்
அதைக் கடந்து அவருக்கு ஸ்க்ரிப்ட் எழுதித்தரமாட்டார்கள். அதனால் கரூர் பேச்சுக்கு உடனடி பதில் தர வேண்டும் என சிவசங்கரிடம் அறிவுறுத்துங்கள் என்று உதயநிதியிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
உதயநிதியும் சிவசங்கரை தொடர்புகொண்டு இதனை தெரிவித்திருக்கிறார். அதனால், கரூரில் விஜய் பேசியவைகள் அனைத்தையும் கவனமாக உள் வாங்கிக்கொண்ட சிவசங்கர், நேற்று மாலை அறிவாலயத்தில் பேட்டி அளித்தார்.
விஜய்யின் ஓவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் எதிர் விமர்சனங்களை வைத்து விஜய் பக்கமே பந்தை திருப்பு அடித்தார் சிவசங்கர்.
திமுகவின் ஐ.டி. விங்கிற்கும் பறந்த உத்தரவுகள்
அதே போல திமுகவின் ஐ.டி. விங்கிற்கும் இதே போல உத்தரவுகள் பறந்தன. அதனடிப்படையில் விஜய்யின் ஒவ்வொரு வரிக்கும் கவுண்டர் விமர்சனத்தை சோசியல் மீடியாவில் வைத்தனர். சிவசங்கர் பேட்டி, சோசியல் மீடியாக்களில் சொல்லப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தது திமுக ஐ.டி. விங்க் !
– சிறப்பு நிருபர் எழில்

