இவர் தனக்கு மின்சார கட்டணம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக வருவதை கவனித்துள்ளார். பல வழிகளில் மின்சார செலவைக் குறைக்க முயற்சி செய்தும் ஏதும் பலனளிக்கவில்லை. இறுதியாக உள்ளூர் மின்வாரிய ஊழியர்கள் நடத்திய விசாரணையில் 15 ஆண்டுகளாக தன்னையறியாமலே பக்கத்து வீட்டுக்காரரின் பணச்சுமையையும் சுமந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
இதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மின்சார கட்டணத்தைக் குறைக்க, பொருட்களை குறைவாகப் பயன்படுத்துவது முதல் சாதனங்களில் வாட்டேஜை கண்காணிப்பது வரை பல வழிகளில் முயன்றுள்ளார். ஆனாலும் மீட்டரில் பில் குறைந்தபாடில்லை.

