தற்போதைய நிதி அமைச்சகத்தின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும பதவியில் இருந்தபோது ஒருபோதும் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சகத்தின் செயலாளராக இருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்தபோதும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என அவர் விளக்கியுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில், செய்தியாளர்களுக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

மேற்படி பதவிகளை வகித்தபோது ஹர்ஷனா சூரியப்பெரும ஒருபோதும் இரட்டைக் குடியுரிமை பெற்றவராக இருந்ததில்லை என்று தாம் பொறுப்புடன் அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

