Last Updated:
பிரான்ஸ் நாட்டில் கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன.
ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயிலால் காட்டுத் தீ ஏற்படாமல் இருப்பதற்காக மரங்களுக்கு தண்ணீர் தெளிக்கப்படும் காட்சிகளே இவை.
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று இந்த ஆண்டின் மூன்றாவது வெப்ப அலை வீசியது. இதனால், மக்கள் சாலைகளில் நடமாடுவதற்கு சிரமத்திற்கு ஆளாகினர்.
ஸ்பெயின் நாட்டில் கடுமையான வெயில் காரணமாக வனப்பகுதிகளில் தீ விபத்து அபாயம் எழுந்துள்ளது. அந்நாட்டின் வலென்சியாவின் நகரில் உள்ள அல்பூஃபெரா பூங்காவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரங்களை குளிர்விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் மரங்கள், செடி, கொடிகள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. அந்நாட்டின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றான லோயர் ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் ஓடை போன்று காட்சியளிக்கிறது. ஆற்றின் ஒரு பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது.
ஸ்பெயினில் சுட்டெரிக்கும் வெயில்.. காட்டு தீ ஏற்படாமல் தடுக்க மரங்களுக்கு தண்ணீர் தெளிப்பு!

