Last Updated:
ஆந்திராவில் பெண்களுக்கு work from home வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திரபிரதேசம் முழுவதும் பெண்களுக்கு work from home வசதியை பெரிய அளவில் ஏற்படுத்தும் திட்டத்தை தீட்டி வருவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினமாக (International Day of Women and Girls in Science) ஆண்டுதோறும் பிப்ரவரி 11-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு, கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றும் முறை பிரபலமடைந்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “வீட்டில் இருந்து பணியாற்றும் முறை சிறப்பானதாக இருந்ததாகவும், வேலைக்கும்-வாழ்க்கைக்குமான சமநிலை இருந்ததாகவும்” குறிப்பிட்டார். சிறிய நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைக்க ஊக்கத் தொகையை அளிக்க முன்வருவதாகவும் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திர அரசின் இந்த முன்னெடுப்புகளால் பெண்கள் பணியாற்றும் பங்களிப்பு அதிகரிக்கும் என்று நம்புவதாகவும், வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டத்தில் மகளிர் அதிகம் பயனடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.
February 12, 2025 6:07 PM IST
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு; அதிரடி காட்டும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு


