வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணியளவில் கெய்ரேனியா (Kyrenia) துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுசு (Tasucu) துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்ட இந்தத் தனியார் கப்பல், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாகக் கடலில் தள்ளாடத் தொடங்கி தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியுள்ளது.
நீர்மட்டத்தில் பலமாக மோதியதில் இரண்டு உடற்பகுதிகளைக் கொண்ட அந்தப் கப்பலின் முன்பகுதி உடைந்து, அதற்குள் நீர் புகுந்ததாக உயிர்தப்பிய பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள்
பிரபல சுற்றுலாத் தளமான கெய்ரேனியா கடற்கரைக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, கவிழ்ந்த படகின் மேல்பகுதியில் சிவப்பு நிற உயிர்காப்பு அங்கிகளை அணிந்தபடி உயிர்தப்பியவர்கள் அமர்ந்திருந்த நிலையில், கடலோரக் காவல் படையினரும் தனியார் படகுகளும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் வடக்கு சைப்ரஸ் ஜனாதிபதி துஃபான் எர்ஹுர்மன் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

