• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வீட்டுக் கடனுக்கு வேட்டு.. ஆப்பு வச்சுடுச்சே RBI! சீரியஸாகும் CIBIL SCORE! வண்டி கூட வாங்க முடியாது! | RBI Tightens Loan Rules as CIBIL Score Gains Importance

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வீட்டுக் கடனுக்கு வேட்டு.. ஆப்பு வச்சுடுச்சே RBI! சீரியஸாகும் CIBIL SCORE! வண்டி கூட வாங்க முடியாது! | RBI Tightens Loan Rules as CIBIL Score Gains Importance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Rajkumar R

Time
Updated: Wednesday, June 24, 2026, 8:00 [IST]

சென்னை: வீடு வாங்க வேண்டும், புதிய கார் வாங்க வேண்டும், குழந்தைகளின் கல்விக்காக கடன் பெற வேண்டும் என்று திட்டமிடுபவர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறையில் பெரிய மாற்றங்கள் வரப் போவதாக கூறப்படும் நிலையில், “சிபில் ஸ்கோர்” நடைமுறையை தீவிரமாக கடைபிடிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளனவாம். இதனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இஎம்ஐ தேதியை தவறவிட்டாலும், அடுத்த முறை கடன் பெற முடியாத சூழல் உருவாகும் என்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய வங்கிகள் வாராக் கடன் பிரச்சினையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடன் வாங்கிய பலர் தவணைகளை முறையாக செலுத்தாததால் வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இதனால், இனிமேல் கடன் வழங்கும்போது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வங்கிகள் உள்ளன. இதன் ஒரு பகுதியாக, கடன் கேட்டு வரும் நபரின் நிதி ஒழுக்கம், பழைய கடன் வரலாறு மற்றும் திருப்பிச் செலுத்தும் பழக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

RBI CIBIL Score Home Loan

சிபில் ஸ்கோர்

இதை மதிப்பிடுவதற்காகவே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் வாங்கிய கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்தியுள்ளார் என்பதை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் மதிப்பெண்ணே சிபில் ஸ்கோர். பொதுவாக 300 முதல் 900 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்த மதிப்பெண் அதிகமாக இருந்தால், அந்த நபர் நம்பகமான கடனாளி என்று வங்கிகள் கருதுகின்றன. குறிப்பாக 750 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் வைத்திருப்பவர்களுக்கு கடன் பெறுவது மிகவும் எளிதாக இருக்கும். குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

மூலப் பத்திரமின்றி சொத்து பதியலாம்! வில்லங்க சான்றிதழில் சர்வே எண் கட்டாயம்! தீர்ப்பை வரவேற்ற பெயிரா

மூலப் பத்திரமின்றி சொத்து பதியலாம்! வில்லங்க சான்றிதழில் சர்வே எண் கட்டாயம்! தீர்ப்பை வரவேற்ற பெயிரா

கிரெடிட் ஸ்கோர்

மாறாக, குறைந்த மதிப்பெண் வைத்திருப்பவர்கள் கடன் பெறும்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, 2027 ஏப்ரல் முதல் கடன் வழங்கும் முறைகளில் கூடுதல் கண்காணிப்பு அமலுக்கு வர உள்ளது. இதன்படி, வங்கிகள் வெறுமனே வருமானத்தை மட்டும் பார்க்காமல், வாடிக்கையாளரின் முழுமையான நிதி வரலாற்றையும் ஆய்வு செய்ய உள்ளன. குறிப்பாக சிபில் ஸ்கோர் 730-க்கு மேல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், 730-க்கு குறைவான மதிப்பெண் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.

கார், பைக்-கிற்கு 'பேன்சி நம்பர்' வாங்க போறீங்களா? பர்ஸ் காலி.. இனி ரூ.8 லட்சம் கட்டணம்!

கார், பைக்-கிற்கு ‘பேன்சி நம்பர்’ வாங்க போறீங்களா? பர்ஸ் காலி.. இனி ரூ.8 லட்சம் கட்டணம்!

சிபில் ஸ்கோர்

இதனால் கடன் கிடைக்காது என்று அர்த்தமில்லை. ஆனால் கூடுதல் ஆவணங்கள், அதிக பிணையம், உத்தரவாதம் அல்லது கூடுதல் வட்டி விகிதம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கிரெடிட் கார்டு பாக்கிகளை சரியான நேரத்தில் செலுத்தாதவர்கள், கடன் தவணைகளை தாமதப்படுத்தியவர்கள் மற்றும் பல இடங்களில் ஒரே நேரத்தில் கடனுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிக பாதிப்பை சந்திக்கலாம். குறிப்பாக வீட்டு கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இப்போதே தங்களது சிபில் ஸ்கோரை சரிபார்க்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

வீட்டு கடன்

ஏனெனில் வீட்டு கடன் என்பது பல லட்சம் ரூபாய் அல்லது கோடிக்கணக்கான தொகையை உள்ளடக்கியதாக இருக்கும். எனவே வங்கிகள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது இயல்பானதாகும். முதல் முறையாக கடன் வாங்குபவர்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கு கடன் வரலாறு இல்லாத காரணத்தால் மட்டும் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது. அவர்களின் வருமானம், வேலை நிலைத்தன்மை, வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பிற அம்சங்களையும் வங்கிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இருப்பினும் எதிர்காலத்தில் நல்ல கிரெடிட் வரலாற்றை உருவாக்குவது முக்கியமாகும்.

கிரெடிட் கார்டு

சிபில் ஸ்கோரை உயர்த்துவதற்கான எளிய வழிகள் உள்ளன. அனைத்து கடன் தவணைகளையும் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு நிலுவைகளை அதிகப்படுத்தக் கூடாது. தேவையில்லாமல் பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பிப்பதையும் தவிர்க்க வேண்டும். பழைய கடன்களை முறையாக முடித்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் தங்களது கிரெடிட் அறிக்கையை அவ்வப்போது பரிசோதித்து தவறுகள் இருந்தால் சரிசெய்ய வேண்டும்.

நிதி ஒழுக்கம்

வங்கிகள் பாதுகாப்பான கடன் வழங்கும் முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களும் நிதி ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக வீட்டு கடன், வாகனக் கடன் மற்றும் கல்விக் கடன் பெற திட்டமிட்டிருப்பவர்கள் தங்களது சிபில் ஸ்கோரை இப்போதே கவனிக்க தொடங்குவது நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் கடன் பெறுவதற்கான முக்கியமான அளவுகோல்களில் ஒன்றாக சிபில் ஸ்கோர் மாறக்கூடும் என்பதால், கடனை சரியான நேரத்தில் செலுத்தும் பழக்கம் இனி மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

English summary

Home, vehicle and education loan seekers may face stricter scrutiny as banks focus more on CIBIL scores.

Read More

Previous Post

திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் – யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது

Next Post

PN கூட்டணியில் பெர்சத்து தொடர்ந்து நீடிக்க வேண்டும்: பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் கருத்து | Makkal Osai

Next Post
PN கூட்டணியில் பெர்சத்து தொடர்ந்து நீடிக்க வேண்டும்: பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் கருத்து | Makkal Osai

PN கூட்டணியில் பெர்சத்து தொடர்ந்து நீடிக்க வேண்டும்: பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் கருத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin