ஒரு நிதிப் பரிவர்த்தனையில், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் சென்னை கிளை எண்பது மில்லியனுக்கும் அதிகமான ரூபாயைத் தவறான வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
துபாயில் உள்ள ஒரு பிரதிநிதி அலுவலகத்திற்கு மாதந்தோறும் செலுத்தப்பட வேண்டிய தொகை, தவறுதலாக மற்றொரு வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டுகிறார்.
மாறி வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணம்
இந்தக் கொடுப்பனவுகள் எமிரேட்ஸ் NBD வங்கிக் கணக்கிற்குச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் சென்னை கிளை, சம்பந்தப்பட்ட பணத்தை அபுதாபி இஸ்லாமிய வங்கியில் உள்ள ஒரு கணக்கில் வரவு வைத்துள்ளது என்று ஜயசேகர கூறினார்.

தவறான கணக்கிற்கு மாற்றப்பட்ட தொகை 974,500 திர்ஹம்கள் ஆகும், இது இலங்கை நாணய மதிப்பில் எண்பது கோடி (80 மில்லியன்) க்கும் அதிகமாகும்.
உடனடியாகச் சரிபார்க்க வேண்டும்
மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட இந்தப் பணத்தை மீட்க முடியாததால் ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

அரசாங்கம் தலையிட்டு, இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

