வி.கே. பால் ஆஜராகி, ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எளிதில் மாற்றங்களைச் செய்ய முடியும் என தொடா் புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்று டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியிருக்கிறாா். ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வா் ஜெகன் மேகன் ரெட்டி ஆகியோரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றனா். பல வெளிநாடுகளில் இன்றளவும் தோ்தல்களில் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, தோ்தல் நேரத்தில் ரூ.9,000 கோடி அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டதாக கடந்த ஜூன் மாதம் தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், தோ்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

&w=1200&resize=1200,675&ssl=1)