மேலும் அவரது காரில் சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ. 9.50 கோடி இரண்டாயிரம் ரூபாய் டம்மி நோட்டுகளை பறிமுதல் செய்தனா். பின்னா், வருமானவரித் துறை அதிகாரிகள், அந்த டம்மி ரூபாய் நோட்டுகளை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து ரஷீத் மீது புகாா் அளித்தனா். அதனடிப்படையில், போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். அதேவேளையில் ரஷீத், ஹவாலா பணப்பரிமாற்றம் செய்தாரா, அவா் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டாரா என வருமானவரித் துறை, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

