மனைவியைப் பார்க்கும் சாக்கில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைந்த ஞானசேகரன்:
அவரது மனைவிகூட, இங்கு நிரந்தரமில்லாத பணியில் இருந்திருக்கிறார். அதனால் சந்தேகப்பட்டு அவரை உள்ளே வராதே எனும் சூழல் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது, பல்கலைக்கழக நேரம் தாண்டி யார் வந்தாலும் உரிய அடையாள அட்டையைக் காட்டி பதிவுசெய்தபின், அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்கச் சொல்லியிருக்கிறோம். வாகனங்களில் வந்தால் கூட அதை சிசிடிவியில் பதிவுசெய்து, வாகன எண்ணை பதிவுசெய்து பெற வேண்டும் என்று கடுமையாக சொல்லியிருக்கிறோம். இதனை நியாயப்படுத்தவிரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக நடந்தது நடந்ததுதான். குற்றத்தைக் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க அரசு துணை நிற்கும் என்பது தான் செய்தி.

