• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வந்தாரா: வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மாணவர் விழிப்புணர்வு திட்டம்

GenevaTimes by GenevaTimes
March 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வந்தாரா: வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மாணவர் விழிப்புணர்வு திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 01, 2025 6:31 PM IST

Vantara | வனவிலங்குகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்கள் போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்க வந்தாரா புதிய முயற்சி மேற்கொள்கிறது.

வந்தாராவந்தாரா
வந்தாரா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இயக்குநரான அனந்த் அம்பானி, உலகெங்கிலும் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் ‘வந்தாரா’ என்ற முன்முயற்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். குஜராத்தில் உள்ள ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் 3,500 ஏக்கர் பரப்பளவில் ஒரு வனப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அரிய மற்றும் அழிந்து வரும் விலங்கினங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுமையான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, மாணவர்களுக்காக சிறப்பு வருகை திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 45 முன்னணி கல்லூரிகளைச் சேர்ந்த 132 எம்பிஏ மாணவர்கள் கடந்த மே மாதம் வந்தாராவிற்கு வருகை தந்தனர்.

வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக வந்தாரா ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு, விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விலங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் அவற்றின் உயிர்வாழ்வு குறித்தும் விளக்கப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், மாணவர்களுக்கு வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இரண்டு நாள் நிகழ்ச்சியில், வனவிலங்குகளைப் பாதுகாக்க எந்த மாதிரியான சூழலை உருவாக்க வேண்டும், என்னென்ன வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து சிறந்த திறமையான மாணவர்கள், குழு விவாதங்கள் மற்றும் நேர்காணல்கள் மூலம் இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு குறித்த பரந்த புரிதல் அளிக்கப்படுவதோடு, தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

இதையும் படிங்க | MODI VANTARA : உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா வந்தாராவை பார்வையிடும் பிரதமர் மோடி

இது தவிர, ஆர்.சி.பி கன்சோலி, ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர் மற்றும் நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் போன்ற ரிலையன்ஸ் அலுவலகங்களும் மாணவர்களுக்கு சுற்றி காண்பிக்கப்படுகின்றன. வந்தாராவைச் சேர்ந்த பராமரிப்பாளர்கள், அனுபவம் வாய்ந்த வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

இருப்பிடத்தை விட்டு தவறான இடங்களில் சிக்கியுள்ள விலங்குகளைப் பராமரித்து மறுவாழ்வு அளிப்பது ஒரு சிறந்த யோசனை. எதிர்கால சந்ததியினரிடம் இந்த யோசனையையும் உறுதியையும் தொடரும் நோக்கத்துடன், வந்தாரா மாணவர்களுக்கான திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது. வந்தாராவின் மரபைத் தொடரச் செய்யவும், மாணவர்களை நிஜ உலகில் வணிகத் தலைவர்களாக மாற்றவும் பாடுபடுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் தொழில்முறை வாழ்க்கையுடன் வனவிலங்குகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு குழுவை உருவாக்குவதாகும்.

வணிகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதை எடுத்துக்காட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அடையும் அதே வேளையில் மாற்றத்தின் முகவர்களாக மாணவர்கள் மாற இந்தத் திட்டம் உதவும் எனவும் வந்தாரா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

First Published :

March 01, 2025 6:31 PM IST

Read More

Previous Post

தற்காலிகமாக மூடப்படும் யால தேசிய பூங்கா

Next Post

டபிள்யூபிஎல் 2025: உள்ளூரில் தொடரும் சோகம்.. நான்காவது தொடர் தோல்வி

Next Post
டபிள்யூபிஎல் 2025: உள்ளூரில் தொடரும் சோகம்.. நான்காவது தொடர் தோல்வி

டபிள்யூபிஎல் 2025: உள்ளூரில் தொடரும் சோகம்.. நான்காவது தொடர் தோல்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin