Last Updated:
லண்டன் பிர்க்பெக் கல்லூரியில் உரையாற்றிய இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிகழ்வில் பெண்மணி இடையூறு செய்த நிலையில், இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளதூ.
லண்டனில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரையாற்றிக் கொண்டிருந்தபோது பெண்மணி ஒருவர் இடையூறு செய்ததற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஆறு நாள் பயணமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். வெள்ளிக்கிழமையன்று லண்டனில் உள்ள பிர்க்பெக் (birkbeck) கல்லூரியில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சட்டம் குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பார்வையாளராக பங்கேற்றிருந்த பெண்மணி ஒருவர் இந்தியாவில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் நிலை குறித்து தலைமை நீதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை மீறி பெண்மணி மீண்டும் மீண்டும் குறுக்கிட்டுப் பேசினார். இந்நிலையில், பார்வையாளர்களின் இத்தகைய கண்ணியமற்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இங்கிலாந்துக்கான இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கருத்து வேறுபாடுகள் ஒரு ஜனநாயக சமூகத்தின் இயல்பான பகுதி என்ற போதிலும், அவை நாகரிகமான மற்றும் மரியாதைக்குரிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
லண்டனில் இந்திய தலைமை நீதிபதி அவமதிப்பு… “கண்ணியமற்ற நடத்தை…” கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம்!


