மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு மதுரை மாவட்டத்தின் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் சந்தைக்கு வரத்து செய்யப்படுகின்றன.
தற்போதைய விலை நிலவரப்படி, ஒரு கிலோ பெங்களூர் தக்காளி ரூ.45, பீன்ஸ் ரூ.80, பீட்ரூட் ரூ.45, பாகற்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.20, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.45 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், முட்டைக்கோஸ் ரூ.25, குடமிளகாய் ரூ.55, கேரட் ரூ.50, காலிஃபிளவர் ஒரு பீஸ் ரூ.45, சவ்சவ் ரூ.35 என்ற விலையில் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூ.30, முருங்கைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.240, பச்சை மிளகாய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.35, பெரிய வெங்காயம் ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு ரூ.20, பூசணிக்காய் ரூ.20, முள்ளங்கி ரூ.30, பீர்க்கங்காய் ரூ.20, கோவக்காய் ரூ.25 என்ற விலையிலும் விற்பனை நடைபெற்று வருகிறது. கீரை வகைகளில், கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.20, புதினா ஒரு கட்டு ரூ.10, வாழைக்காய் மற்றும் வாழைத்தண்டு தலா ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆடி மாதம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் திருவிழாக்களை முன்னிட்டு காய்கறிகளின் தேவை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து மற்றும் பொதுமக்களின் தேவை ஆகியவற்றைப் பொறுத்து, வரும் நாட்களில் விலைகளில் மேலும் ஏற்றம் அல்லது இறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

