கோலாலம்பூர்:
பச்சையாக சாப்பிடும் போது ரம்புத்தான் விதைகள் விஷத்தன்மை கொண்டவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் ரம்புத்தான் விதையைக் கடிக்கும் போது ஏற்படும் கசப்பான சுவை, தாவரங்கள் தங்களின் விதைகளைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையாகவே உருவாக்கும் வேதிப்பொருட்களால் ஏற்படுகிறது.
1. விதையில் உள்ள அபாயகரமான வேதிப்பொருட்கள்:
ஆராய்ச்சிகளின்படி, ரம்புத்தான் விதைகளில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மூன்று முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன:


சபோனின்கள் (Saponins): இவை செரிமான மண்டலத்தை எரிச்சலடையச் செய்து குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.
டானின்கள் (Tannins): இவை விதைக்கு மிகக் கடுமையான கசப்புச் சுவையைத் தருகின்றன, மேலும் உடலின் ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனைக் குறைக்கின்றன.
ஆல்கலாய்டுகள் (Alkaloids): இவை மனித நரம்பு மண்டலத்தில் மயக்கம் மற்றும் உணர்ச்சியற்ற தன்மையை (Narcotic effects) ஏற்படுத்தக்கூடியவை.


2. நாம் பயப்பட வேண்டுமா?
தேவையில்லை. ததேச்சையாக ஒரு முறை விதையைக் கடித்தால் உடனடியாகப் பெரும் ஆபத்து எதுவும் ஏற்படாது. விதையின் கடுமையான கசப்புச் சுவையே மனிதர்கள் அதை மென்று முழுங்குவதைத் தடுக்கும் முதன்மைப் பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.
3. சமைத்தால் விஷத்தன்மை மாறுமா?
ஆம். வெப்பம் மற்றும் பிற பதப்படுத்தும் முறைகள் இந்த விஷத்தன்மையை நடுநிலையாக்குகின்றன:
விதை வறுக்கப்படும் போது (Roasting) அல்லது நொதிக்க வைக்கப்படும் போது (Fermentation), அதில் உள்ள சபோனின் மற்றும் டானின் அளவுகள் கணிசமாகக் குறைகின்றன.
ஃபிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் ரம்புத்தான் விதைகளை வறுத்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
எனவே, ரம்புத்தான் பழத்தின் இனிப்பான சுளையை அனுபவித்துச் சாப்பிடுங்கள்; ஆனால் அதன் விதையைக் கடித்துச் சாப்பிடாமல் துப்பி விடுவதே பாதுகாப்பானது.



