மத்திய கிழக்கு நெருக்கடியால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? சர்வதேச அளவில் உரங்களின் விலை உயர்வால், அரசு கருவூலத்திற்கு ஆயிரக்கணக்கான கோடிகள் சுமை ஏற்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. நாட்டில் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு உரங்களுக்கான மானிய செலவை ரூ.70,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என தெரிகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, யூரியா மற்றும் பிற உரங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு பெருமளவில் அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.


