Last Updated:
கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இன்று டெல்லியில் அம்மாநில அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தினார்.
காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இன்று டெல்லியில் அம்மாநில அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தை நடத்தினார்.
டெல்லியில் உள்ள கர்நாடகா பவனில் நடந்த இந்தக் கூட்டத்தில், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பாஜக உட்பட அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றனர். அதன்படி, கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வர், அமைச்சர்கள் கே.ஜே. ஜார்ஜ், ஈஸ்வர் காந்த்ரே, சரண் பிரகாஷ், கிருஷ்ண பைரே கவுடா, சதீஷ் ஜார்கிஹோலி, ராம லிங்கரெட்டி ஆகியோரும், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய இணை அமைச்சர் ஷோபா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடகாவின் நீர் சார்ந்த நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை. மேகதாது மற்றும் மகதாயி திட்டங்களின் நிலை, நமது நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு மற்றும் குடிநீர் மற்றும் நீர் வளங்கள் தொடர்பான பிற முக்கிய விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, டெல்லியில் இன்று சட்டம் மற்றும் நீர்வளத் துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
ದೆಹಲಿಯ ಕರ್ನಾಟಕ ಭವನದಲ್ಲಿಂದು ಮೇಕೆದಾಟು, ಮಹದಾಯಿ ಸೇರಿದಂತೆ ರಾಜ್ಯದ ಜನರ ಕುಡಿಯುವ ನೀರು, ಜಲ ಸಂಪನ್ಮೂಲ ಯೋಜನೆಗಳ ಸ್ಥಿತಿಗತಿ, ಜಲಾಶಯಗಳಲ್ಲಿನ ನೀರಿನ ಪರಿಸ್ಥಿತಿ ಸೇರಿದಂತೆ ಹಲವು ಮಹತ್ವದ ವಿಚಾರಗಳ ಕುರಿತು ಕಾನೂನು ಮತ್ತು ಜಲ ಸಂಪನ್ಮೂಲ ಇಲಾಖೆಗಳ ಹಿರಿಯ ಅಧಿಕಾರಿಗಳೊಂದಿಗೆ ಸಮಾಲೋಚನೆ ನಡೆಸಿದೆ.
ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಸಚಿವರಾದ ಶ್ರೀ… pic.twitter.com/D2tmlwAwyI
— DK Shivakumar (@DKShivakumar) July 27, 2026
இக்கூட்டத்தில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, டெல்லியில் உள்ள கர்நாடக அரசின் சிறப்புப் பிரதிநிதி டாக்டர் டி. பி. ஜெயச்சந்திரா, கர்நாடகாவின் தலைமை வழக்கறிஞர் கே. சசி கிரண் ஷெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கர்நாடகாவின் நியாயமான நீர் உரிமைகளைப் பாதுகாக்கவும், நமது மக்களுக்கு நீண்டகால நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நாங்கள் உறுதியுடன் உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.


