Last Updated:
Mullaperiyar Case: முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.
முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இரு மடங்கு வயதிலும் உறுதியாக இருப்பதாக நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அணை பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே சூர்யகாந்த் தலைமையிலான வேறு அமர்வு விசாரணை நடத்தி வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
பருவமழை காலம் வரஉள்ளதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் கோரினார். அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், 130 ஆண்டுகளுக்கு மேல் எத்தனையோ பருவமழையை முல்லைப்பெரியாறு அணை கண்டுள்ளதாகவும்
அணை உடைந்து விடும் என காமிக் கதைகளைப்போல மக்கள் அச்ச உணர்வில் உள்ளதாகவும் கேரளாவில் தானும் வசித்துள்ளதாக கூறிய நீதிபதி ரிஷிகேஷ் ராய் கூறினார்.
முல்லை பெரியாறு அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளதாகவும் கூறினார். முல்லைப் பெரியாறு வழக்கு ஒரே நீதிபதிகள் அமர்வில் மட்டுமே விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உறுதியாக தெரிவித்தது. முல்லைப்பெரியாறு அணை நமது வயதை விட இரு மடங்கு வயதிலும் உறுதியாக இருப்பதாக நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
January 28, 2025 5:23 PM IST


