தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றது. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
நவராத்திரியின் போது பல்வேறு வேண்டுதல்களை வைத்து வேடமணிந்த பக்தர்கள் வீதிகளில் காணிக்கை பெற்று, தசரா திருவிழாவின் போது முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து அந்த காணிக்கையை அளிப்பார்கள். அந்தவகையில் முத்தாரம்மன் கோவிலில் கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 12ஆம் தேதி நடந்தது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த தசரா திருவிழாவின் போது பக்தர்கள் அளித்த காணிக்கையை எண்ணும் பணி கடந்த 5 நாட்களாக நடந்து வந்தது. இதில் 18 நிரந்தர உண்டியல்களும், தசரா திருவிழாவிற்கு அமைக்கப்பட்ட 65 தற்காலிக உண்டியல்களும் எண்ணும் பணி நடந்தது.
இதையும் படிங்க: பெண்களுக்குப் பிரத்தியேகமான பிங்க் பூங்கா… என்னென்ன வசதி இருக்கு தெரியுமா…?
சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கோமதி, குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் தலைமையில் இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் தசரா திருவிழாவின் போது உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 57 லட்சத்து 23 ஆயிரத்து 30 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 115 கிராம் 300 மில்லி தங்கப் பொருட்களும், 2,689 கிராம் 900 மில்லி வெள்ளிப் பொருட்களும் கிடைத்துள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தவிர 15 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 46 லட்சத்து ஆயிரத்து 514 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகக் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
