தமிழ்நாட்டில் செயல்படும் 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அனைத்து கடைகளும் இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார்.
மதுபான சாலைகள்
அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதையில்லா தமிழ்நாடு என்ற விடயங்களைத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகளால் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாகச் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படும் மதுபான சாலைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 717 மதுபானக் கடைகளை மூட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விற்பனைக் கடைகள்
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
அதில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.
2/2
இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு#CMJosephVijay pic.twitter.com/rYfphaAmhM
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 12, 2026
மேற்படி ஆணைக்கிணங்க 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன் முதலமைச்சரின் அறிவிப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

