Last Updated:
Fish Prices| முடிந்தது மீன்பிடித் தடைக் காலம் நிறைவு பெற்ற நிலையில் கோவை உக்கடம் மீன் சந்தையில் கூட்டம் அலைமோதியது.
மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அசைவப் பிரியர்கள் பெருமளவில் மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.
மீன் வரத்து அதிகரித்ததன் காரணமாக, பல வகையான மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் வஞ்சரம் ₹1,300 இருந்து ₹700 ஆகவும், பாறை ₹600 இருந்து ₹320 ஆகவும், மத்தி ₹400 இருந்து ₹200 ஆகவும், நெத்திலி ₹420 இருந்து ₹250 ஆகவும், செம்மீன் ₹650 இருந்து ₹400 ஆகவும், வாவல் ₹900 இருந்து ₹620 ஆகவும், அயிலை ₹450 இருந்து ₹250 ஆகவும், கெலாத்தி (லெதர் ஜாக்கெட்) ₹550 இருந்து ₹320 ஆகவும், சங்கரா ₹400 இருந்து ₹260 ஆகவும், கொடுவா ₹850 இருந்து ₹550 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. நண்டு ₹680 இருந்து ₹430 ஆகவும் குறைந்து விற்பனை செய்யப்பட்டன.
இந்த தடை காலம் முடிவடைந்த பிறகு, இந்த வாரம் மீன் விலை குறைந்து காணப்பட்டதால், மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தங்களுக்கு பிடித்த மீன்களை குறைந்த விலைக்கு மீன் பிரியர்கள் வாங்கி சென்றனர்.
June 23, 2025 2:23 PM IST
Fish Prices: மீன் விலை கம்மி தான் – கூவி கூவி விற்ற மீன் – உக்கடம் மீன் சந்தையில் அலைமோதும் கூட்டம்…

