• Login
Sunday, July 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீண்டும் மிரட்டும் கொரோனா.. ஆந்திராவை அலறவிடும் பாதிப்பு! 4 பேர் உயிரிழந்ததால் திக்திக் | Andhra Pradesh Reports 12 Corona Cases, 4 Deaths In Less Than A Month; Health Department On Alert

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மீண்டும் மிரட்டும் கொரோனா.. ஆந்திராவை அலறவிடும் பாதிப்பு! 4 பேர் உயிரிழந்ததால் திக்திக் | Andhra Pradesh Reports 12 Corona Cases, 4 Deaths In Less Than A Month; Health Department On Alert
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Vigneshkumar

Time
Updated: Saturday, July 18, 2026, 9:24 [IST]

அமராவதி: கொரோனா பாதிப்பு எந்தளவுக்கு நம்மை படுத்தி எடுத்தது என்பதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். இதற்கிடையே இப்போது மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. ஆந்திராவில் கடந்த சில நாட்களில் மட்டும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2020 இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஒரு உலுக்கு உலுக்கியது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளுமே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு பல ஆண்டுகள் ஆனது.

Corona Corona virus Andhra Pradesh Corona virus in Andhra

ஆந்திரா கொரோனா பாதிப்பு

இதற்கிடையே ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பரவி வருகிறது. கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான நாட்களில் மட்டும் ஆந்திராவில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார ஆணையர் ஜி. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதில் கடுமையான பாதிப்பு மற்றும் ஏற்கனவே கடுமையான உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உயிரிழந்த நால்வருக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள் உள்ளிட்ட கடுமையான இணை நோய்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் மூவர் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து?

சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து?

கடப்பா

முதலில் ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் கடந்த ஜூன் 26ம் தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து ஜூலை 1 முதல் 16 வரை மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் இருவர், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

மாவட்ட வாரியாகப் பார்த்தால், அதிகபட்சமாக கடப்பா மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. குண்டூரில் 2 பேரும், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த பாதிப்புகள் அனைத்தும் ஒரே பகுதியில் பதிவாகவில்லை. வெவ்வேறு மண்டலங்களில் தனித்தனியாக கண்டறியப்பட்டவை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

வேலூரில் திடீர் கொரோனா மரணம்.. ஆந்திராவில் 8 பேருக்கு சிகிச்சை.. மீண்டும் மிரட்டும் கோவிட் பாதிப்பு!

வேலூரில் திடீர் கொரோனா மரணம்.. ஆந்திராவில் 8 பேருக்கு சிகிச்சை.. மீண்டும் மிரட்டும் கோவிட் பாதிப்பு!

இந்தியாவில் எவ்வளவு பாதிப்பு

ஜூன் 26 முதல் ஜூலை 15 வரை மாநிலத்தில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12வது பாதிப்பு தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 339 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 64, மகாராஷ்டிராவில் 43, தமிழ்நாட்டில் 39, அந்தமான்-நிக்கோபார் மற்றும் டெல்லியில் தலா 18, ராஜஸ்தானில் 12 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அப்படியே கொரோனா மாதிரி.. சொகுசு கப்பலில்

அப்படியே கொரோனா மாதிரி.. சொகுசு கப்பலில் “ஹான்டா வைரஸ்” அட்டகாசம்! நடுக்கடலில் தவிக்கும் பயணிகள்

மருத்துவர்கள்

இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் கொரோனாவால் முன்பு போல தீவிர பாதிப்பு அதிகம் ஏற்படாது. இது வழக்கமான சளி அல்லது காய்ச்சலை போலவே இருக்கும் என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வது, சளி காய்ச்சல் இருந்தால் தானாக முன்வந்து தனிமைப்படுத்தி கொள்வது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்டவற்றை செய்தாலே பாதுகாப்பாக இருக்க முடியும்!

English summary

Andhra Pradesh has reported 12 Covid-19 cases and four deaths between June 26 and July 16(ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு): Andhra Pradesh Corona cases latest news in tamil.

Read More

Previous Post

‘மறைமலையடிகளாரின் வாழ்வையும், பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்’ – மு.க.ஸ்டாலின் | Makkal Osai

Next Post

ரூ.2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: Gpay,Paytm பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? | Government May Reintroduce MDR on UPI Payments above Rs 2,000 for Large Merchants

Next Post
ரூ.2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: Gpay,Paytm பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? | Government May Reintroduce MDR on UPI Payments above Rs 2,000 for Large Merchants

ரூ.2,000க்கு மேல் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: Gpay,Paytm பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? | Government May Reintroduce MDR on UPI Payments above Rs 2,000 for Large Merchants

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin