சந்தேகநபரிடமிருந்து ஏழு 5,000 ரூபாய் கள்ள நோட்டுகள், ஆறு 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டு ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மிரிஹானவில் கள்ள நோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மிரிஹானவின் கோட்டை வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து ஏழு 5,000 ரூபாய் கள்ள நோட்டுகள், ஆறு 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டு ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், கள்ள நோட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி மற்றும் ஸ்கேனர் உள்ளிட்ட ஏனைய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், புறக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (09) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

