இதுதொடர்பாக சிவசேனா(யுபிடி) மூத்த தலைவர் அமபாதாஸ் தன்வே பகிர்ந்த எக்ஸ் பதிவில்,
முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஃபட்னாவீஸுக்கு வாழ்த்துக்கள். மராத்வாடா சமூக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஜெயக்வாடி அணையைப் புதுப்பித்து, நீர்யிழப்பை தடுக்க வேண்டும். நீர்ப்பாசனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். சத்ரபதி சம்பாஜிநகரில் இருந்து புணே மற்றும் ஜல்னா முதல் நாந்தேட் வரை விரைவுச்சாலைகள் அமைக்க வேண்டும். .
சத்ரபதி சம்பாஜிநகருக்கான குடிநீர் குழாய் திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கப்படாவிட்டால், புதிய அரசு போராட்டங்களைச் சந்திக்க நேரிடும், சத்ரபதி சாம்பாஜியாநகரில் இருந்து விமான இணைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

