• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மனிதர்களை பிளாக்மெயில் செய்யும் AI: சாட் ஜிபிடி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி எச்சரிக்கை..!! | OpenAI Insider Warns: Future AI Could Manipulate, Trick and Even Blackmail Humans

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மனிதர்களை பிளாக்மெயில் செய்யும் AI: சாட் ஜிபிடி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி எச்சரிக்கை..!! | OpenAI Insider Warns: Future AI Could Manipulate, Trick and Even Blackmail Humans
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மனிதர்களை பிளாக்மெயில் செய்யும் AI: சாட் ஜிபிடி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி எச்சரிக்கை..!!

ஏஐ தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் பல நன்மைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் பல ஆபத்துகளுக்கும் வாய்ப்புள்ளது என தொடர்ச்சியாக குரல்கள் எழ தொடங்கியுள்ளன. ஏஐ நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களே இத்தகைய எச்சரிக்கையை வெளியிடுவது அதிர்ச்சியை தந்துள்ளது.

சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜாகுப் பச்சோக்கி ஏஐ-ஆல் ஏற்படும் ஆபத்துகளுக்கு மனித குலம் துளி கூட தயாராக இல்லை என கூறியுள்ளார். An Alien Mind என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பிளாக் பதிவில், எதிர்கால ஏஐ அமைப்புகளின் ஆபத்தான பரிணாம வளர்ச்சி குறித்தும், அதை கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.

மனிதர்களை பிளாக்மெயில் செய்யும் AI: சாட் ஜிபிடி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி எச்சரிக்கை..!!

இதுவரை நாம் ஏஐ-ஐ வெறும் ஒரு கருவியாக மட்டுமே பார்த்து வருகிறோம். ஆனால் எதிர்காலத்தில் வரவிருக்கும் மேம்பட்ட ஏஐ ஏஜெண்டுகள் தங்களுக்கென தனிப்பட்ட குறிக்கோள்களை உருவாக்கி கொள்ளும் என எச்சரிக்கிறார். இந்த ஏஐ அமைப்புகள் தங்களின் குறிக்கோள்களை எட்ட மனிதர்களை ஏமாற்றுவது அல்லது மிரட்டுவது போன்ற வழிகளிலும் ஈடுபடலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

ஏஐ துறையில் இருக்கும் மிகப்பெரிய சவாலே ,ஏஐ-இன் சிந்தனை மனிதர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதி செய்வது தான் என கூறும் அவர் ஏஐ தொழில்நுட்பத்தை எந்தவொரு நிறுவனமும், Alignment மற்றும் Monitoring சவால்களுக்கு முழுமையான தீர்வு காணவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது ஏஐ கட்டுப்பாட்டை மீறும் போதும் தன்னிச்சையாக செயல்படும் போதும் அதன் விளைவுகளை சமாளிக்க யாரும் தயாராக இல்லை என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஏஐ நிறுவனங்கள் தங்களது ஆய்வுகளை தாமாகவே முன்வந்து சற்று மெதுவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏஐ மாடல்கள் மனிதர்களின் உதவியின்றி தங்களை தாங்களே சுயமாய் மேம்படுத்தி கொள்ளும் திறனை பெற்று வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த வேகம் தொடர்ந்தால், ஏஐ-ன் உண்மையான நுண்ணறிவை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலை உருவாகும் என்கிறார்.

அண்மையில் ஓபன்ஏஐ-ன் சில ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களை ஏமாற்றி ஹேக்கிங்கில் ஈடுபட்டதை குறிப்பிடும் அவர், இந்த சவாலை தனிப்பட்ட ஏஐ நிறுவனங்களால் மட்டும் தீர்த்துவிட முடியாது. உலக நாடுகளின் அரசுகள் இணைந்து எதிர்கால ஏஐ வளர்ச்சிக்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை உடனடியாக முதன்மை படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share This Article

English summary

OpenAI Insider Warns: Future AI Could Manipulate, Trick and Even Blackmail Humans

OpenAI chief scientist Jakub Pachocki warns that rapidly advancing AI systems could one day pursue their own goals and manipulate humans through bargaining, trickery, or even blackmail./மனிதர்களை பிளாக்மெயில் செய்யும் AI: சாட் ஜிபிடி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி எச்சரிக்கை..!!

Story first published: Monday, September 7, 2026, 14:33 [IST]

Other articles published on Sep 7, 2026

Read More

Previous Post

அமெரிக்க அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட்டால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்: ஈரான் அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post

உலு பெர்னாம் அருகே கோர விபத்து: 2 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்! | Makkal Osai

Next Post
உலு பெர்னாம் அருகே கோர விபத்து: 2 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்! | Makkal Osai

உலு பெர்னாம் அருகே கோர விபத்து: 2 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin