Last Updated:
மணமகனின் தந்தை கல்லூரி முதல்வர் என்பதால், தனது மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் காவல் உதவி ஆய்வாளரின் திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜான் மேஜர். இவருக்கு பஸ்தி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகனின் தந்தை கல்லூரி முதல்வர் என்பதால், தனது மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி கல்யாண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.
அதன்படி திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உர்வலமாக செல்ல மணமகன் ஆயத்தமாகியுள்ளார். வீடே விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில் அழையா விருந்தாளியாக இளைஞர் ஒருவர் அங்கு வந்துள்ளார். வந்தவர் நேராக மணமகனின் பெற்றோரிடம் சென்றுள்ளார்.
அந்த இளைஞர் அவர்களிடம் கூறிய தகவலால் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் திளைத்திருந்த ஒட்டுமொத்த கல்யாண வீடும் நிசப்தமாகியுள்ளது. காவல் உதவி ஆய்வாளரான உங்கள் மகன் கட்டிக்கப்போகும் பெண், தனது காதலி என்று கூறி குண்டை தூக்கிப் போட்டுள்ளார் அந்த இளைஞர். தானும், அந்த பெண்ணும் 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் அவரை தன்னால் மறக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதே மன நிலையில் தான் தனது காதலியும் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கொந்தளித்துள்ளனர். ஆனால், கல்லூரி முதல்வரான மணமகனின் தந்தை மிகவும் பக்குவத்துடன் இளைஞர் கூறியதை பொறுமையாக செவி கொடுத்து கேட்டுள்ளார். அவர் கூறியது உண்மையா என்பதை உறுதி செய்வதற்காக மணப்பெண்ணிடம் விசாரித்துள்ளார்.
அவரும் இளைஞர் கூறியது அத்தனையும் உண்மை தான் என்று ஆமோதித்துள்ளார். உடனே நடைபெற இருந்த திருமணத்தை கைவிடுவதாக மாப்பிள்ளை வீட்டார் முடிவு செய்துள்ளனர். அதை அறிந்த பெண் வீட்டார் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர். அடுத்த கணமே திரைப்பட பாணியில் பெண்ணின் காதலன் கல்யாண வீட்டில் ஆஜராகியுள்ளார்.
அங்கு சென்றதும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு உங்களது மகளுக்கு தான் வாழ்க்கை கொடுப்பதாக கூறி, எழுதி வைத்திருந்த வசனத்தை பேசி ஒப்பித்துள்ளார். வேறு வழியின்றி அதே கல்யாண மண்டபத்தில் காதல் ஜோடி இருவருக்கும் திருமணம் செய்ய பெண் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதைனிடையே, திருமணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு மணப்பெண்ணின் காதல் விவகாரம் தெரிந்ததால் மணமகனின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இருந்த போதும் வட மாநிலங்களை உலுக்கிய ஹனிமூன் கொலை, நீல நிற டிம்ப் கொலை போன்று திருமணத்துக்குப் பின்பு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னரே, தனது மகனின் வாழ்க்கை தப்பியதாக காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
மண்டபத்தில் நுழைந்த அந்த நபர்.. கடைசி நிமிடத்தில் நின்ற போலீஸ் எஸ்ஐயின் திருமணம்.. என்ன நடந்தது?

