இதில் மத்திய அதிவேக வீதி, ருவன்புர அதிவேகப் பாதை மற்றும் துறைமுக நுழைவுச் சாலை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 402 பில்லியன் ரூபாய் நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதில் மத்திய அதிவேக வீதி, ருவன்புர அதிவேகப் பாதை மற்றும் துறைமுக நுழைவுச் சாலை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத 130 பிரதான வீதிகளைப் புனர்நிர்மாணம் செய்யவும், வாகன நெரிசலைக் குறைக்க ‘National Traffic Database’ எனும் நவீன தரவு கட்டமைப்பை உருவாக்கி, ஸ்மார்ட் வீதி சமிக்ஞை மற்றும் கெமரா தொகுதிகளை அறிமுகப்படுத்தவும் இதன்போது திட்டமிடப்பட்டது.
மேலும், சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை கட்டம் கட்டமாக மாவட்டச் செயலாளர்களிடம் கையளிப்பது குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

