சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும். ஷிராந்தி ராஜபக்ச கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
“ மகிந்த ராஜபக்ச முதுமை அடைந்துள்ளார். ஒரு மனைவியாக, அவர் மகிந்த ராஜபக்சவைக் கவனித்துக்கொள்ள விரும்புகிறார். எனவே, கூடிய விரைவில் நாடு திரும்புவதே அவரது நம்பிக்கையாகும்,” என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.
மகிந்தவுடன் ஷராந்தி இருக்கவேண்டிய நேரம்
“இந்த நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு 80 வயது ஆகிவிட்டது இத்தகைய சூழ்நிலையில், இது அவரது மனைவி அவருடன் இருக்க வேண்டிய நேரம்,” என்று கமகே மேலும் வலியுறுத்தினார்.

ரூ. 10 கோடி வைப்புத்தொகை தொடர்பாக ஷிராந்தி ராஜபக்சவிடம் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணை நடத்தி வரும் நிலையில், “சிரிலிய சவியா” கணக்கில் 10 மில்லியன் வரவு வைக்கப்பட்ட நிலையில், விசாரணைகளில் இருந்து தப்பிக்கும் முயற்சியாகவே ஷிராந்தி நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கமகே மறுத்தார்.
FCID-யில் ஷிராந்தி முன்னிலையாவது உறுதி
மேலும், ஷிராந்தி மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே சிங்கப்பூருக்குச் சென்றதாகவும், FCID-யின் முன் ஆஜராவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஷிராந்திராஜபக்ச செப்டம்பர் 24 அன்று FCID-யின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு, FCID அதிகாரிகள் அது தொடர்பான எழுத்துபூர்வ உத்தரவை அவரிடம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

