• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பூரி ரத யாத்திரையில் முன் களப் பணியாளர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பூரி ரத யாத்திரையில் முன் களப் பணியாளர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 14, 2026 10:12 PM IST

திருவிழா முடியும் வரை பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என ரிலையன்ஸ் அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கிய ரிலையன்ஸ் அறக்கட்டளை
முன்கள பணியாளர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கிய ரிலையன்ஸ் அறக்கட்டளை

பூரி ரத யாத்திரை 2026-ஐ முன்னிட்டு, ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) ‘பூரி சேவா’ (Puri Seva) என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் அவசரக்கால உதவிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்வரிசைப் பணியாளர்களுக்கு ஆதரவாகக் கரம் கோர்த்துள்ளது.

திருவிழாக் காலங்களில் பூரியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்காக இரவு பகலாகப் பணியாற்றும் 1,400 முன்வரிசைப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக பானங்கள் மற்றும் அத்தியாவசிய சிற்றுண்டிகள் வழங்கும் பணியை ரிலையன்ஸ் அறக்கட்டளை தொடங்கியுள்ளது. திருவிழா முடியும் வரை பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என ரிலையன்ஸ் அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களில் 840 தீயணைப்பு வீரர்கள், 200 ஊர்க்காவல் படையினர் (Home Guards) மற்றும் 360 குடிமைப் பாதுகாப்புப் (Civil Defense) பணியாளர்கள் அடங்குவர். ரத யாத்திரையின் போது தீ பாதுகாப்பு, அவசரக்கால மேலாண்மை, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு போன்ற மிக முக்கியமான மற்றும் சவாலான பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்திற்கு அருகிலுள்ள கிராண்ட் ரோடு, நரேந்திர போகரி, போலநாத் பள்ளி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை, மாலதிபாட்பூர், தலாபானியா மற்றும் சமங்கா போன்ற முக்கியப் பகுதிகளில் இந்தத் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவசரச் சூழல்களை எதிர்கொள்ள நடமாடும் தீயணைப்பு வாகனங்களும் நகரம் முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதே ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இந்த முக்கிய நோக்கமாகும். இத்துடன், ரத யாத்திரை விழாவைச் சுமுகமாக நடத்துவதற்கும் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்கப் பணிக்கு உறுதுணையாக இருக்கவும் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ‘தூய்மையான பூரி’ என்ற இலக்கை அடைவதற்காகப் பூரி நகராட்சிக்கு 4 அடிக்கு 2 அடி அளவிலான 10,000 குப்பைச் சேகரிப்புப் பைகள் மற்றும் 9 இன்ச் அளவிலான 1,400 சிலிகான் பாதுகாப்பு கையுறைகளை (Safety Gloves) ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது.

பூரியின் மிக அதிகக் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 500 பணியாளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்தத் தூய்மைப் பொருட்கள் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ரத யாத்திரை திருவிழாக் காலத்தில் நகரத்தைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதோடு, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த உன்னத முயற்சியின் முக்கிய நோக்கமாகும். அன்னதானம், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மருத்துவ உதவி மற்றும் தன்னார்வத் தொண்டு உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் நலச் சேவைகளை இந்த ‘பூரி சேவா’ திட்டத்தின்கீழ் ரிலையன்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

First Published :

Jul 14, 2026 10:04 PM IST

Read More

Previous Post

இந்தியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ‘கிளி’ வைரஸ்

Next Post

அதே ‘பூதம்’! 8000 வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்.. ஐடி துறையை போலவே வங்கிகளிலும் பணிநீக்கம்! | Nearly 8000 Bank Employees Lose Jobs in India: HDFC, Axis & Kotak Slash Workforce Amid AI & Digital Revolution!

Next Post
அதே ‘பூதம்’! 8000 வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்.. ஐடி துறையை போலவே வங்கிகளிலும் பணிநீக்கம்! | Nearly 8000 Bank Employees Lose Jobs in India: HDFC, Axis & Kotak Slash Workforce Amid AI & Digital Revolution!

அதே 'பூதம்'! 8000 வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்.. ஐடி துறையை போலவே வங்கிகளிலும் பணிநீக்கம்! | Nearly 8000 Bank Employees Lose Jobs in India: HDFC, Axis & Kotak Slash Workforce Amid AI & Digital Revolution!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin