பெட்டாலிங் ஜெயா: ஜார்ஜ் டவுனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு பூனை இறந்ததற்கு காரணம் என்று ஒரு பலகார விற்பனையாளர் வழக்கு தொடரப்பட்டது. 47 வயதான ஃபைசுல் அஸ்லான் ரிட்சுவான், மாஜிஸ்திரேட் நத்ரதுன் நைம் சைடி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.
மே 31 அன்று காலை 8.30 மணியளவில் ஜெலுத்தோங்கின் ஜாலான் கோத்தா கியாமில் உள்ள ஆற்றில் தூக்கி எறிவதற்கு முன்பு பூனையின் மரணத்திற்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். ஹரியான் மெட்ரோவின் கூற்றுப்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 428ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
துணை அரசு வழக்கறிஞர் எம் தர்ஷினி 7,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை கோரினார். இருப்பினும், நேஷனல் லீகல் எய்ட் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஒரு வக்கீல், ஃபைசுல் மாதம் ரிங்கிட் 1,500 மட்டுமே சம்பாதிப்பதால், ஜாமீன் தொகையை குறைக்கும்படி கோரினார். மாஜிஸ்திரேட் ஒரு நபர் உத்தரவாததுடன் 6,000 ரிங்கிட் ஜாமீனை நிர்ணயித்ததோடு ஜூலை 18 ஆம் தேதி மீண்டும் வழக்கிற்கான தேதியை நிர்ணயித்தார்.
The post பூனையை ஆற்றில் வீசியதாக குற்றஞ்சாட்ட ஆடவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

