ஏற்கெனவே, பிகாரின் துணை முதல்வராக பதவி வகித்திருந்த தேஜஸ்வி யாதவ் இம்முறை முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா என்பதே அக்கட்சி தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இத்தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றிபெற்றால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணக்கமான உறவை கடைப்பிடித்து வரும் தேஜஸ்விக்கு, முதல்வர் நாற்காலியில் அமர வாய்ப்பு வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்தரப்பில், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரையே மீண்டும் முதல்வராக்க, பாஜக தலைமை விரும்பும் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
இந்திய அரசியலில் மூத்த தலைவர்களுள் ஒருவராக திகழும் நிதீஷ் குமாரை எதிர்த்து இம்முறை, வயது வித்தியாசத்தில் இளம் தலைமுறை அரசியல் தலைவரான தேஜஸ்வி யாதவ் போட்டியிடுவதால் பிகார் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

