Last Updated:
Nashik TCS Case | டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்ற முயற்சி புகாரை தொடர்ந்து டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
மாகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக எழுந்த புகார் எழுந்தது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் புகார் தொடர்பாக 9 எஃப்ஐஆர்களை பதிவு செய்த காவல் துறையினர் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கட்டாய மதமாற்ற புகாரில் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களிடம் இருந்து நிதி பெறப்பட்டதா என்பன குறித்து விசாரித்து வருவதாக காவல் ஆணையர் சந்தீப் கார்த்திக் தெரிவித்துள்ளார். மேலும் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் டீம் லீடர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாகவும், இது தொடர்பாக மனித வள அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
#WATCH | Nashik TCS alleged religious conversion and sexual harassment | Ashwini Chainani, Operations Manager of the company, was presented before the Court and has been remanded to 14-day judicial custody. pic.twitter.com/ZBgRRwZMRW
— ANI (@ANI) April 15, 2026
மேலும் கைதான 7 பேரையும் பணி நீக்கம் செய்த டிசிஎஸ் நிறுவனம், பிரச்சினை முடியும் வரை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


